இந்த வலையதளத்தில் உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டது.இதுவரை நான் பதிவிட்ட பதிவுகளும், இனி பதிவிடப் போகும் பதிவுகளும் எனது சொந்த படைப்புகள் அல்ல.பல பதிவர்கள் எழுதிய நல்ல பதிவுகளைத்தான் இங்குதொகுத்துள்ளேன்.

என்னுடைய மற்ற இணையதளங்கள்

Thursday, January 26, 2012

ரேபீஸ் எச்சரிக்கை: தடுப்பூசி போட்டால் மரணத்தை தவிர்க்கலாம்



மனிதர்களை தாக்கும் மிக முக்கிய வைரஸ் ரேபிஸ் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கின்றது. விலங்குகளாலும், செல்லப்பிராணிகளாலும் இந்த நோய் தாக்குகிறது. உலகில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை மனிதர்கள் ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மனிதர்களை ரேபிஸ் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லா நாய்க்கடியும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து. சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எளிதில் தடுக்கலாம்.

பூனை, குரங்கு, நரி, ஓநாய், வவ்வால் போன்றவை மூலமும் ரேபிஸ் பரவும். ரேபிஸ் உடலில் பரவி நரம்பு மண்டலத்தை தாக்கினால் அதன் பிறகு செய்வதற்கு ஒண்றுமில்லை. மரணம் நிச்சயம். வெறிநாயின் எச்சிலிலும் ரேபிஸ் கிருமிகள் உண்டு. எனவே ஏற்கனவே காயம் இருந்து அதை நாய் நக்கினாலும் ரேபிஸ் பரவும். உணவு கட்டுப்பாடு ஏதும் கிடையாது.

கடிபட்ட இடத்தை மூடவேண்டாம்

நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். இது ரொம்ப முக்கியம். கடித்த இடத்தில் ரேபிஸ் கிருமிகள் கோடிக்கணக்கில் இருக்கும். குறைந்தது 2 நிமிடங்கள் ஓடும் டேப் தண்ணீரில் கழுவவேண்டும். அதன் பின் ஆன்டிசெப்டிக் லோஷன் போட்டு கழுவலாம். கடி வாயை மூடக்கூடாது; தையல் போடக்கூடாது. உடனே முதல் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும்.

நோய் தடுப்பூசி அவசியம்

இது எந்த விலங்கு கடித்தாலும் டிடி ஊசி போடவேண்டியது அவசியம். இதனையடுத்து ரேபிஸ் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க ரேபிஸ் ஊசி போடவேண்டும். அதிகமான அளவில் உள்ள காயத்திற்கு இம்யுனொக்லொபின் ஊசி கட்டாயம் போட வேண்டும்.

நாயை தொடுதல், உணவு ஊட்டுதல், காயம் படாத தோலை நக்குதல். போன்றவற்றிக்கு ஊசி தேவையில்லை. அதேசமயம் சிராய்ப்பு காயம், கவ்வுதல், குறைவான அளவில் ரத்தக்கசிவு போன்றவை ஏற்பட்டால் காயத்திற்கு முதலுதவி செய்யவேண்டும் பின்னர் ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி அவசியம் போடவேண்டும். ஏற்கனவே உள்ள காயத்தை நக்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட ஆழமான காயங்கள், நரி, ஓநாய், வவ்வால் கடி போன்றவற்றிர்க்கு நோய் தடுப்பூசி அவசியம் போடவேண்டும். காயத்திற்கு முதலுதவி மற்றும் ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி மற்றும் இம்முயுனோக்லோபின் தடுப்பு மருந்து ஆசியவை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
--


No comments: