இந்த வலையதளத்தில் உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டது.இதுவரை நான் பதிவிட்ட பதிவுகளும், இனி பதிவிடப் போகும் பதிவுகளும் எனது சொந்த படைப்புகள் அல்ல.பல பதிவர்கள் எழுதிய நல்ல பதிவுகளைத்தான் இங்குதொகுத்துள்ளேன்.

என்னுடைய மற்ற இணையதளங்கள்

Thursday, April 19, 2012

குக்கரை பராமரிங்க! ஆயுள் நீடிக்கும்!!



இன்றைக்கு பெரும்பாலோனோர் வீடுகளில் குக்கர் சமையல்தான். எரிபொருளும் சிக்கனமாகிறது,சமையல் எளிதாக முடியும் என்பதால் கிராமங்களிலும் குக்கர்தான் உபயோகிக்கின்றனர். குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும், நமக்கும் பாதுகாப்பாக இருக்கும். ப்ரசர் குக்கர் பராமரிப்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.


சுகாதாரம் அவசியம்
சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட், விசில் போன்றவைகளை தனித்தனியாக கழுவி துடைக்க வேண்டும். ப்ரஸ் கொண்டு விசில் உள்ள உணவு துணுக்குகளை நன்றாக கழுவவேண்டும்.

குக்கரின் அடிப்பகுதியில் விளக்கி கழுவ வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். நாம் அதிக அளவில் ஸ்க்ரப் கொண்டு தேய்க்காமல் மென்மையான ஸ்பாஞ்ச் வைத்து குக்கரின் அடிப்பகுதியை கழுவலாம்.


குக்கரில் அடி பிடித்து விட்டாலோ, கரை படிந்து விட்டாலோ ஸ்க்ரப்பர் ப்ரஸ் கொண்டு கிளீன் செய்யலாம். ஒரு கப் குளிர்ந்த நீரில் சில துளிகள் சோப் நீர் விட்டு குக்கரில் ஊற்றவும். அதை லேசா சூடாக்கி பின்னர் கழுவினால் தீய்ந்து போன உணவுகள் ஈசியாக வந்து விடும்.

கறுப்பு வெள்ளையாகும்
குக்கரின் உட்புறம் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோல் அல்லது வினிகர் கொஞ்சம் போட்டுப் பின்பு அதில் வைக்கக் கூடிய பாத்திரங்களை அடுக்கி வைப்பதால் அதன் உட்புறம் கறுப்பாகாமல் இருக்கும். கறுப்பாக இருந்தாலும் இந்த முறையின் மூலம் கறுப்பு நீங்கி விடும்.

குக்கரின் ரெகுலேட்டர், விசில் போன்றவைகளை குழாயில் காண்பித்து கழுவுவது பழைய முறை. தற்போது தனித்தனியாக கழுவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே விசில் பகுதியை தனித்தனியாக உரசி கழுவி நன்றாக உலர்ந்த துணி கொண்டு துடைத்து வைக்கலாம் நீண்ட நாட்களுக்கு வரும்.


கேஸ்கட் பராமரிப்பு
சிலர் குக்கர் மூடியைத் திறந்தபின்பு கேஸ்கெட்டை எடுக்காமல் அப்படியே வைத்து விடுவார்கள். சிலர் கேஸ்கெட்டை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்வார்கள். இது மிகவும் தவறு. சூட்டோடு அப்படியே போடுவதால் ரப்பர் அப்படியே இறுகிப்போய்விடும். இதனால் கேஸ்கெட் அதிக நாள் உழைக்காது.


சமையல் முடிந்தவுடனேயே குக்கரின் மூடியைத் திறந்து ரப்பர் கேஸ்கட்டைக் கழற்றி அதை நன்கு சுத்தமாகக் கழுவி நன்கு இழுத்துவிட்டுப் பின்பு உரிய இடத்தில் மாட்டவேண்டும். இப்படிச் செய்தால் ரப்பர் கேஸ்கெட் அதன் ஒரிஜினல் சைஸில் இருக்கும். நீண்ட நாள் உழைக்கும்.

நீண்ட ஆயுள் கிடைக்கும்
தற்போது காப்பர் பாட்டம், நான் ஸ்டிக் சாண்ட்விட்ச் போன்ற வகைகளைப் பயன்படுத்துகிறார்கள். கேஸ் அடுப்பில் தீயை அதிகமாக வைத்து இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் அதிகம் இல்லாமல், தீயும் அதிகமாக இருந்தால் பாத்திரம் சீக்கிரம் கெட்டுவிடும். இவ்வகைப் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது அடுப்பில் தீயை ரொம்பவும் குறைத்து "சிம்'மில் வைத்தாலே போதும். சமையலும் சீக்கிரம் முடியும், கேஸ் மிச்சப்படும்.


நமக்கு பாதுகாப்பு

வருடத்திற்கு ஒருமுறை குக்கரை அதற்குரிய கடைகளில் கொடுத்து இன்ஸ்பெக்சன் செய்யவேண்டும். கேஸ்கட், விசில், போன்றவைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை பார்க்கவேண்டும். சின்னதாக ஏதாவது பிரச்சினை என்றாலும் குக்கர் வெடித்து விடும் ஜாக்கிரதை. குக்கரின் மூடி சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். லூசாக இருந்தால் உடனே மாற்றவேண்டும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.


குக்கர் பராமரிப்பு குக்கரின் ஆயுளை மட்டும் நீட்டிப்பதில்லை. குக்கர் வெடிக்காமல் இருந்தால் நம் ஆயுளும் நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இவைகளைப் பராமரிக்கும் விதத்தைப் புரிந்து கொண்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். சிக்கனமும் ஆகும்.

செல்போன் கதிர்வீச்சில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு!


Solutions For Cellphone Deffects
செல்போன் தொழில் நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன என்கின்றது ஆய்வு முடிவுகள். செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை
தவிர்க்கலாம்.
ஆம்! குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து பெருமை கொள்ளும் பெற்றோர்கள் நிச்சயம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வெகு அதிகமாக குழந்தைகளை பாதிக்கும்.
முடிந்த வரை லேண்ட்லைனை பயன்படுத்துவது நல்லது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியே செல்போனை பயன்படுத்தினாலும் முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவது நல்லது. சில கிராமப்புற பகுதிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. இது போன்று சரியாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் செல்போன் பயன்படுத்தும் போது, கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அதோடு தூங்கும் போது செல்போனை பக்கத்திலேயே வைத்து கொண்டு தூங்குபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இந்த பழக்கத்தினை ஆரம்ப காலத்திலேயே தவிர்த்து கொள்வது சரியான ஒன்று. மற்றவர்களுக்கு பேசும் போது, எதிர் முனையில் பேசுபவர்கள் அழைப்பை எடுத்த பின், காதில் வைத்து பேசுவது நல்லது. ஏனெனில் பேசும் போது ஏற்படும் கதிர்வீச்சைவிட, ரிங்டோன் போகும் பொழுது 14 மடங்கு அதிகம் கதிரவீச்சுகள் வெளிப்படுகிறது.
முக்கியமாக வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதை தவிர்க்கவும். இது போன்று வைப்ரேட் மோடில் வைத்து, சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகம் தாக்குகின்றன.
பொதுவாக வலது காதில் வைத்து மொபைல் பேசும் போது மூளை நேரடியாக பாதிக்கும். இதனால் இடது பக்க காதில் வைத்து பேசினால் இதன் பாதிப்பை குறைக்கலாம். பயணங்களில் பொழுதுபோக்காக நிறைய பேர் கேம்கள் விளையாடுவது வழக்கம். இப்படி பயணங்களில் உற்றுபார்த்து ஒரு வேலையை செய்வதன் மூலம் கண்கள் எளிதாக பாதிக்கப்படும்.
இப்படி விளையாட்டாகவும், கவன குறைவாகவும் செய்யும் சில வேலைகளை குறைத்தாலே செல்போன்கள் மூலம் ஏற்படும் பெரிய பாதிப்புகளை ஓரளவு குறைக்க முடியும். 

Thanks