இந்த வலையதளத்தில் உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டது.இதுவரை நான் பதிவிட்ட பதிவுகளும், இனி பதிவிடப் போகும் பதிவுகளும் எனது சொந்த படைப்புகள் அல்ல.பல பதிவர்கள் எழுதிய நல்ல பதிவுகளைத்தான் இங்குதொகுத்துள்ளேன்.

என்னுடைய மற்ற இணையதளங்கள்

Thursday, December 29, 2011

ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது சுவாரஸ்யமான தகவல்கள்

 ATM (Automatic Teller Machine)
கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போதெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக் கொண்டே யாரும் பயணிப்பதில் லை. காரணம் ஏடி. எம் அட்டைகள்.

வங்கியில் கணக்கை ஆரம்பித்த னைவருக்குமே ஒரு அட்டை கிடை க்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தே வையோ அப்போது எடுத்துக் கொள் ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவி ட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியைகுறைத்திருக்கின்றன.

நாம் பணம் தேவைப்படும் போது .டி.எம் முன்னால் சென்று நிற்கிறோம், நமது அட்டையை உள்ளே நுழைக்கிறோம். சங்கேத எண் ணை அமுக்குகிறோம். நம்முடைய கட்டளைக்கு ஏற்ப பணம் கிடைக்கி றது. திருப்திப்பட்டு விடுகிறோம்.

Automatic Teller Machine என்பதன் சுருக்கம் தான் ATM. நம் முடைய அட்டையில் 16 எண்கள் கொண்ட ஒரு எண் இருக்கும். இது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண எண். ஆனால் இதன் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி அர்த்தங்க ள் உண்டு.

முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். அத ற்கடுத்த ஒன்பது எண்களும் சே வை வழங்கு நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்த எல் லைக்குள் இருக்கும். கடைசி எண் ஒரு ரகசிய எண். அதுதான் உங்கள் அட்டை பயன்படுத்தக் கூடியதா இல்லையா என்பதைச் சொல்லும்.

மாஸ்டர்கார்ட் எண்கள் ஐந்து எனும் எண்ணில் ஆரம்பிக்கும், விசா எண்கள் நான்கு எனும் எண் ணில் ஆரம்பிக்கும் என்பது ஒரு சிறு சுவாரஸ்யத் தகவல்.

அட்டைகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிரடிட் கார்ட் எனப்படும் கடன ட்டைகள். இன்னொன்று டெபி ட் கார்ட் அல் லது செக் கார்ட். கடனட்டையில் நாம் செலவ ழிக்கும் பணத்தை மாதம் ஒரு முறை செலுத்தினால் போது ம். செக் கார்ட் மூலம் செல வழிக்கும் பணம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உடனே கழிக்கப்பட்டு விடும்.

ஏடிஎம் முன்னால் சென்று அட்டையை உள்ளே செலுத்தி நம்முடை  சங்கேத எண்ணைக் குறிப்பி ட்டபின் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டு பொத்தானை அமுக்குகிறோம். நம் முடைய அட்டையின் பின்னா ல் இருக்கும் மேக்னட்டிக் ஸ்ட் ரைப் நம்முடைய அட்டையின் எண்ணை மென் குறியீடாக்கி உள்ளே அனுப்பும். அதற்குப் பயன் படும் இடம் தான் கார்ட் ரீடர் என ப்படும் நாம் அட்டையை உள்ளே நுழைக்கும் இடம். அப்போது கட்டளை ஏடிஎம் முனையிலிருந்து சுவிட்ச் என அழைக்கப்படும் கணினி மென்பொருளுக்குள் நுழைகிறது. இங்கே இரண்டு வித மான சோதனை வளையங்க ள் இருக்கின்றன. முதலில் நாம் பயன்படுத்தும் அட்டை சரியானதுதானா? அதற்கு நாம் கொடுத்த சங்கேத எண் சரியா னது தானா என்பதைச் சரிபார் க்கும் சோதனை.

இந்தச் சோதனை தோல்விய டைந்தால் நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று பொருள். ஒருவேளை சங்கேத எண்ணை த் தவறா கச் சொல்லியிருக்கலாம்.

இரண்டாவது சோதனை நம்முடைய வங்கிக்கணக்கில் நாம் கேட் கும் பணம் இருக்கிறதா? நான் பணம் எடுப்பதில் இன்றைய தினத்தின் உச்ச வரம்பை எட்டி யிருக்கிறோமா ? என்பது குறித்த சோத னைகள். முதல் சோதனை முடிந்தபின், இரண்டாவது சோதனைக் குள் நுழைந்து இரண்டும் சரியாய் இருந்தால் பணம் கொடுக்கலாம் எனும் பதில் தானியங்கி முனைக்கு வரும். இந்த இரண்டு சோத னை களையும் கடக்க பல இலட்சம் தக வல்கள் அடங்கியிருக்கும் மென் கோப்பு களில் தேடுதல் நடக்கும்.
இந்த தேடுதல் முடிந்து தானியங்கி முனைக்கு வரும் தாமதம் சில வினாடிகளே. இந்த வினாடிகள் அதிகரிக்கும் போது தான் நாம் சலித்துக் கொள்கிறோம்.

பணத்தை எண்ணித் தரும் பண ம் பட்டுவாடா இயந்திரமும் நுட் மான சென்சார்களால் ஆனது. இது தவறு இழைப்பதில்லை. இரண்டு நோட்டுகள் ஒட்டி வரு ம் எனும் ஆசை நப்பாசையாய் போய்விடும் என்பது திண்ணம்.

இன்னொரு சுவாரஸ்யமான வி ஷயமும் அடங்கியிருக்கிறது. நாம் நம்மிடம் ஒரு வங்கியின் அட் டை இருந்தாலும் வேறு வங்கியின் தானியங்கி நிலையமும் நம க்குக் பணம் கொடுக்கும். எப்படி ?
இதை செட்டில்மண்ட் என்பார்கள். அதாவது வங்கிகள் எந்தெந்த வங்கி அட்டைகளுக்குப் பணம் கொடுக்கிற தோ அந்தந்த வங்கிகளின் கணக்கி ல் அந்தப் பணத்தைச் சேர்த்துக் கொ ள்ளும். அன்றைய தினத்தின் இறுதி யில் வங்கிகள் மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என் பதை கணக்கிட்டு உடன்பாடு செய்து கொள்கின்றன.

மின் பண பரிமாற்றம் எனப்படும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்க லானதும், பணம் ஈட்டக் கூடியதுமாகும். பல முன்னணி மென் பொருள் நிறுவனங்கள் இதை நடத்துகின்றன.
சரி, மென்பொருள் நிறுவனங்க ளுக்கு இதனால் எப்படி காசு கிடைக்கிறது? இந்த தானியங் கி நிலையத்திலிருந்து செல்லு ம் கட்டளைகள் மென்பொரு ளோடு இணையாவிடில் ஒன்று க்கும் உதவாது. இதன் பின்னால் இருக்கும் மென்பொருள்தான் வரும் தகவல்களைச் சரிபார்த் தல், பணம் பட்டுவாடா செய்ய உத்தரவிடுதல், மீதம் கணக்கிடு தல் என ஒட்டுமொத்தப் பணியையும் செய்கிறது. அனைத்து விவரங் களையும் மென் கோப்புகளில் சேமித்தும் வைக்கிறது. இந்த சுவிட்ச்எனப்படும் இந்த மென்பொரு ளுக்குள் வரும் தகவல்கள், அல்லது விண்ணப்பங்களு க்கு ஏற்ப மென்பொருள் நிறு வனம் வங்கிகளிடம் பணம் பெற்றுக் கொள்கின்றன.

அதாவது நீங்கள் பத்து முறை பணம் எடுக்கிறீர்கள் என்றா ல் மென் பொருளுக்குக் கி டைப்பது பத்து தகவல்கள். ஒவ்வொரு தகவலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மென்பொருள் நிறுவனத்துக்குச் செல்லும். தினமும் பலஆயிரக்கணக்கான தானியங்கி களில் நிகழும் இந்த பரிவர்த்த னை மூலம் பல கோடிக்கணக் கான பணம் மென்பொருள் நிறு வனங்களுக்குப் போய் சேர்கிற து. இதற்காகத் தான் ஆயிரக்க ணக்கான மென்பொறியாளர் கள் பணியாற்றுகின்றனர். அதி லும் ஒவ்வொரு வங்கிக்கும் ரிய பிரத்தேக சட்டங்களின் அடி ப்படையில் மென்பொருள் இய ங்குவது தான் முக்கியம். குறிப்பாக சில வங்கிகள் ஒரு நாள் பத் தாயிரம் ரூபாய் மட்டுமே ஏடிஎம் வழியாக எடுக்க அனு மதிக்கும். சில வங்கிகள் ஐம் பதாயிரம் ரூபாய் வரை அனு மதிக்கும். இதற்குத் தக்க படி மென்பொருள் தயாராக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவில் இருபத்து ஐந்திற்கும் முப்பத்து நான்கிற் கும் இடைப்பட்ட வயதுடைய வர்களில் அறுபது சதவீதம் பேர் மாதம் எட்டு முறை ஏடிம் இயந் திரத்தைப் பணம் எடுக்க நாடுகிறார்களாம். பெரும் பாலான ஏடிஎம்நிலையங்களில் வெள்ளிக் கிழமைகளில் தான் அதிக பரி வர்த்தனை நடக்கிறதாம்.
ஏடிஎம் அட்டையைப் பயன்ப டுத்துபவர்கள் மற்றவர்களை விட இருபது முதல் இருபத்து ஐந்து சதவீதம் வரை அதிகமா கச் செல வழிக்கிறார்களாம்.

ஏடிஎம் அட்டைக்கு மிக முக் கியமானது பின் எனப்படும் சங்கேத எண். இது தானியங்கியில் அளி க்கப்பட்டவுடன் குறியீடுகளாக மாறிவிடும். அதன்பின் யாரும் அதை திருட முடியாது.

ஆனால் அது நம்மிடம் இருக்கு ம் வரை அதை நாம் தான் பாது காக்க வேண்டும். இல்லை யேல் இழப்பு நமக்கு தான். அட் டையும் எண்ணும் கிடைத்து விட்டால் யார் வேண்டுமானா ல் நம் வங்கிக்கணக்கி லிருந்து பணம் எடுக்க முடியும். இணை யத்திலும் பொருட்கள் வாங்க முடியும்.

சங்கேத எண்ணை பத்திரமாய் வைத்திருக்க சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.
சங்கேத எண்ணை எழுதி வைக்கக் கூடாது.

மறந்து விடுவோம் எழுதியே ஆகவேண்டும் என விரும்பி னால் அதை வீட்டில் எங்காவ து பத்திரமாய் எழுதி வைக்க வேண்டும்.

பர்சிலோ, ஏடிஎம் அட்டை இருக்கும் இடங்களிலோ வை க்கவே கூடாது.
சங்கேத எண் உங்களோடு தொடர்பற்றவையாக ஆனால் உங்க ளால் மறக்க முடியாததாக இருக் வேண்டும்.

குறிப்பாக உங்கள் பிறந்த நாள், தொலைபேசி எண் போன்றவை இல்லாமல் இருத்தல் நலம்.
சங்கேத எண்ணை எழுதி வைக் கும்போது கூட அதை உங்களு க்கு மட்டுமே புரியும் சங்கேத மொழியிலேயே எழுதி வைக்க லாம்.

சங்கேத எண்ணை பயன்படுத்தும் போது தானியங்கிக்கு மிகவும் அருகாக குனிந்து மற்றவர்கள் பார்க்காத படி எண்களை பயன்படுத்தவேண்டும். குனிந்தபடி எண் ணை பயன்படுத்துவது ரகசி யக் காமராக்களிடமிருந்து பெரும்பாலும் தப்ப வைக்கு ம்.
பணம் எடுத்ததும் உடனே பா க்கெட்டில் பாதுகாப்பாக வை த்துவிட்டு சென்று விடுங்கள். வீட்டில் சென்று எண்ணிப் பாருங்கள். எப்படியானாலும் தவறு நிகழ்ந்தால் அதை சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தான் தெரியப்படுத்த வேண்டும் எனவே தானியங்கி முன் னால் நின்று எண்ணிக்கொண்டி ருப்பது தேவையற்றது.

யாராவது உங்களைத் தாக்கக் கூடும் எனும் பயம் தோன்றினால்கேன்சல்பட்டனை அமுக்கி விட் டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்புங்கள்.

இரவு நேரங்களில் ஏடிஎம் பய ன்படுத்த வேண்டியிருந்தால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலுள்ள ஏடிஎம் களைப் பயன்படுத்துங்கள்.

முக்கியமாக அட்டையின் பின் னால் இருக்கும் தொலைபேசி எண் ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அட்டை தொ லைந்ததை அறிந்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங் கள். உடனே உங்கள் அட்டை யின் எண்ஏமாற்றுவரிசையி ல் சேர்க்கப்படும். அதன்பின் அந் அட்டையை யாராவது பயன் படுத்தினாலும் அதுஏமாற்று வேலைஎன்னும் முத்திரை இருப்ப தால் நிராகரிக்கப்படும்.