இந்த வலையதளத்தில் உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டது.இதுவரை நான் பதிவிட்ட பதிவுகளும், இனி பதிவிடப் போகும் பதிவுகளும் எனது சொந்த படைப்புகள் அல்ல.பல பதிவர்கள் எழுதிய நல்ல பதிவுகளைத்தான் இங்குதொகுத்துள்ளேன்.

என்னுடைய மற்ற இணையதளங்கள்

Sunday, December 11, 2011

உஷாரா இருங்க !! இன்சூரன்ஸ் மோசடி

உஷாரா இருங்க !! இன்சூரன்ஸ் மோசடி நாம எவளோ தான் உஷாரா இருந்தாலும், நம்மளை கேனயன் ஆகுவதற்கு , ரூம் போட்டு யோசிக்கிறார்கள் . புரியவில்லியா!!! நாட்டில் நடக்கும் இன்சூரன்ஸ் மோசடிகளைதான் சொல்கிறேன் .

நீங்கள் புதிதாக ,ஒரு insurance எடுக்கும் போது,நம்மில் எத்தனை பேர் , முன்னாடி application 
இல் எல்லா , இடத்தையும் எழுதி நிரப்புகிறார்கள்.எத்தனை இடத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள். அட அதை விடுங்கள் . application ஐ பூர்த்தி செய்யும்போது , நம்மிடம் 2 அல்லது 3 இடத்தில் application இன் ஓரத்தில் கை எழுத்து , வாங்குவார்கள் .நாமளும் அவசரத்தில் போட்டு விடுவோம்.


பிறகு அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா ?. நம்முடைய பேரை , மாற்றியோ , அல்லது நமது , பிறந்த நாள்,வயது , தந்தை பெயர் ,பான் கார்டு நம்பர் , மற்றும் என்ன என்ன மாற்ற முடியுமோ, அவற்றை மாற்றி , அவர்களது சிஸ்டம் இல் upload பண்ணி விடுவார்கள். ஓரத்தில் நீங்கள் போடும், கை எழுத்து என்பது , அவர்கள் மாற்றியதற்காக காண ஒப்புதல்.
அதாவது அந்த விவரங்கள் , நம் ஒப்புதலின் பெயரில் தான் மாற்ற பட்டது என்பதற்கான கை எழுத்து .


இப்போது ,நீங்கக் குடுத்த போட்டோ proof ,அட்ரஸ் proof , எல்லாம் தவறாக இருக்கும். இப்போது , நீங்கள் claim பண்ண போகும்போது , நீங்கள் அவர் இல்லை, வயது தவறாக இருக்கிறது , என்று எல்லா காரணம் காட்டி, நமது இன்சூரன்ஸ் claim ஐ 
நிராகரித்து (reject )செய்து விடுவார்கள்.நம்மிடம் , இன்சூரன்ஸ் எடுக்க சொல்லி வரும் , agent களுக்கே இது தெரிய வாயப்பு குறைவு .அவர்கள் , அவருடைய முதலாளிகள் என்ன சொல்கிறார்களோ , அதை அப்படியே செய்வார்கள்.இது எல்லாமே , மேல்மட்ட மாக நடக்கின்ற விஷயம் .சில agent கள் , தெரிந்தே கூட செய்ய வாயப்பு இருக்கிறது.


எப்படி தடுப்பது: 


application ஐ , முழுவதுமாக நாமே பூர்த்தி செய்ய வேண்டும் .எல்லாம் மிகச் சரியாக இருக்க வேண்டும் .பிறகு , அதை ஒரு xerox எடுத்து வைத்து கொள்ளள வேண்டும் .வேண்டிய இடத்தில் மட்டும் தான் , கை எழுத்து போட வேண்டும் .கண்டிப்பாக ,application இன் ஓரத்தில் கை எழுத்து போட கூடாது.


இது இன்சூரன்ஸ் application கு ,மட்டும் அல்ல எல்லா application களுக்கும் பொருந்தும்.


இன்சூரன்ஸ் என்பது , நாம் இல்லை என்றால் , நம் குடும்பத்தினர் ,பயன் பெறுவதற்கு. நமக்கே , application fill பண்ணும் போது , என்ன செய்தோம் , என்று நினைவு இருக்காது ,அப்படி இருக்க நமது பெற்றோர் /மனைவிக்கு எப்படி தெரியும். இப்போது எல்லாம் இன்சூரன்ஸ் , rejection (தள்ளுபடி) அளவு மிக அதிக அளவில் நடந்து கொண்டு இருக்கின்றன . நாம் எந்த சட்ட பூர்வ நடவடிக்கையும் எதுக்கு முடியாது , ஏனெனில் , நமது application இல் தான் எல்லாம் தவறாக இருகிறதே.

இவை , தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் லில் தான் , அதிகமாக நடந்து கொண்டு இருக்கின்றன . நான் பெயர் சொல்ல விரும்பவில்லை.அதான் நமது தொலைகாட்சி இல் , விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்களே !. ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் 40 சதவிகதம் நிராகரித்து விடுகிறார்களாம்.


நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்க விரும்பினால் , இன்சூரன்ஸ் மட்டும் எடுங்கள் . அதை விட்டு விட்டு ,அதில் 3 வருடம் , கட்டினால் எவளவு லாபம் கிடக்கும் ,என்று அதை ஒரு முதலிடாக பார்க்க கூடாது,அவசியமானதாக பார்க்க வேண்டும் .ULIP திட்டங்களை பற்றி தான் , சொல்கிறேன்.
என்னை பொறுத்த வரை , டெர்ம் இன்சூரன்ஸ் போதுமானது . LIC பாலிசி கள் அருமை என்று சொல்ல வில்லை, நமக்கு வேற வழி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் இந்த விசியத்தில்,கொஞ்சம் கெடுபிடிகள் வேண்டும் என்பது என் கருத்து.


Thanks
http://ganeshdigitalvideos.blogspot.com/2011/12/blog-post_11.html

No comments: